காலப் பெருவெளிக்குள்
இழுத்துவரப்பட்ட
வயதுகளின் சாயல்கள்
நரைத்த முடி
சுறுங்கிய தோல்
தளர்ந்த நடையென
ஓரிடத்தில் அமர்ந்த
யோசிப்பில் தொடங்கிய
இளமைகால சிந்தனைகளின்
சீர்தூக்கல்கள்
நியாய அநியாய
மனோ பாவங்களின்
வெளிப்பட்ட வேதனையும்
இன்பங்களுமாய்
போகும் பொழுதுகளில்
நகரும் வாழ்வாய்
முதுமை.